Type Here to Get Search Results !

ஆண் குழந்தைகள் நலனுக்காக 'பொன் மகன்' சேமிப்பு திட்டம்





ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.





கோவை தலைமை தபால்நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி லியோ மைக்கேல் கூறியதாவது:







ஆண் குழந்தைகளுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்.







ஏப்., - மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு, 8 சதவீத வட்டி அளிக்கப்படும். திட்டத்தில், இணைய வயது வரம்பு கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்

Top Post Ad

Below Post Ad