அம்மா உணவகங்களில் எக்காரணம் கொண்டும் பயனாளிகளுக்கு உணவை பார்சலில் வழங்கக்கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சிலர் பார்சல் வாங்கிச் செல்வதால் பசியோடு வருவோருக்கு உணவு கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தது. இதையடுத்து, அவ்வாறு பார்சல் வழங்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.