மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
பியர்லெஸ் மருத்துவமனையின் வளாகத்தில் திருநங்கைகளுக்காக அந்தர் என்ற பெயரில் மாதத்துக்கு 2 முறை பிரத்யோக மருத்துவமனை செயல்படும்.
அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பியர்லெஸ் மருத்துவமனை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.
இதன் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் திருநங்கைகள் மற்றவர்களை போல நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும் என அமெரிக்க துணை தூதரக இயக்குநர் மோனிகா ஷீ குறிப்பிட்டுள்ளார்.