Type Here to Get Search Results !

உணவே மருந்து - இந்த எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக் கூடாது!




எதிர் உணவுகள்.


எதிர் உணவுகளைச் சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து உடல்நிலையை பாதிக்கும்.

உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்! எல்லோரும் இதை அறிந்து எதிர்உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.

எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கி
பசலைக்கீரை X எள்
திப்பிலி X மீன்.
தயிர் X மீன் .
திப்பிலி X தேன்.
துளசி X பால்.
தேன் X நெய்.
பால் X புளிப்பான பொருள்கள்.
மோர் X வாழைப்பழம்
இறைச்சி X விளக்கெண்ணெய்
முள்ளங்கி X பால்
அகத்திக்கீரை X ஆல்கஹால்

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும் போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்து விடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும் போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறி விடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, தேவைப்படும் போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும் போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறி விடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்

பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது.

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோசம் பிடிக்கப் போகிறது என அர்த்தம்.

காதில் அதீதக் குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வர நேரம் வந்து விட்டது என அர்த்தம்.

கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால்
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிகப் பசி எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் உடலில் அதிக எடை கூடி விட்டது அதனைக் குறைக்க வேண்டும் என அர்த்தம்.

தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என அர்த்தம்.

தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.



வாட்ஸ் அப் பகிர்வு

Top Post Ad

Below Post Ad