Type Here to Get Search Results !

பழுதடைந்த கல்லீரலையும் சரி செய்யும் மூலிகை தேநீர்






இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் சுத்தப்படுத்தும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மூலிகை என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். இரத்தத்தை வடிகட்டுதல் உட்பட பல முக்கியமான உடல் செயல்பாடுகளை இவை செய்கிறது. உடலுக்கு வேண்டிய இராசயனங்களை உருவாக்குவதால் இது சுரப்பியாகவும் சொல்லலாம். சில வாழ்க்கை முறைகள் கல்லீரலை சேதப்படுத்தலாம். கல்லீரல் நோய் தாக்கம் உண்டாகலாம். இந்த கல்லீரல் பாதுகாக்க செய்யும் அற்புதமான மூலிகை டீ ஒன்று குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.

கல்லீரல் என்னும் அற்புதமான உறுப்பு..

உடலின் ராஜ உறுப்புகள் மூளை, கல்லீரல், நுரையீரல், இதயம், செரிமான மண்டலம், நரம்பு மண்டலம், சிறுநீரகம் போன்றவை. இவை அனைத்தும் இணைந்து உடலில் வேலை செய்யும் போது உடல் ஆரோக்கியம் என்பது மிகச்சிறப்பாக இருக்கும். நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இதில் கல்லீரல் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் சிறு துளி ஆரோக்கியமாக இருந்து மீதி பாகம் அழுகி இருந்தாலும் கூட அவை மீண்டும் வளர்ந்து ஆரோக்கியமாக வரும் அளவுக்கு இந்த உறுப்பு செயல்படும். உடலில் இந்த உறுப்புக்கு மட்டும் இந்த சக்தி உண்டு.

கல்லீரலில் உண்டாகும் நோய்கள் :

கல்லீரல் தன்னைத்தானே குணப்படுத்திகொள்ளும் நிலையிலும் இதன் ஆரோக்கியம் கெடும் வகையில் பலரும் கல்லீரலில் பாதிப்பை பெறுவது அதிகரித்துவருகிறது. இன்று கல்லீரல் முழுவதும் சேதமடைந்த நிலையில் பலரை பார்க்க முடிகிறது. மதுப்பழக்கம், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வது, தொற்றுகளால் கல்லீரல் நோய் உண்டாகும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களுக்கு கல்லீரலை காக்கும் அருமருந்தாக ஆயுர்வேதம் இந்த மூலிகை டீ பரிந்துரைக்கிறது. இது குறித்து இன்னும் சற்று விளக்கமாக பார்க்கலாம்.

கல்லீரல் நோய் தீர கஷாயம் :

தேவை ;

சிறு நெருஞ்சில் பொடி - 2 கிராம்
கருவாப்பட்டை சூரணம் - 2 கிராம்
ஏலக்காய் சூரணம் - 2 கிராம்
சர்க்கரை - 2 கிராம்
தண்ணீர் - 300 மில்லி

செய்முறை :

தண்ணீரை கொதிக்கவைத்து அதில் இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க வைத்து 100 மில்லியாக வரும் போது இதை இறக்கி வடிகட்டி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்க வேண்டாம். இதை தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பு எடுத்துவரலாம்.

கல்லீரல் நோய் :

கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதை எல்லா மருத்துவ முறைகளும் ஒப்புகொள்கின்றன. இன்று கல்லீரல் நோய்களை அதிகம் கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கல்லீரல் நோய் குணப்படுத்தகூடிய அதிலிருந்து ஆரோக்கியமாக வைக்க இந்த கஷாயம் உதவும்.

இந்த கஷாயம் கல்லீரலில் சேர்ந்திருக்கும் பித்தம் சார்ந்த இரத்தம் சார்ந்த கழிவுகளை வெளியேற்ற செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யகூடிய அருமருந்தாக இது செயல்படுகிறது.

காலை நேர மூலிகை தேநீர் :

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானமாக இதை எடுத்துகொள்ளலாம். இன்று அரிசி தொடங்கி அனைத்து விதமான உணவு பொருள்களிலும் கலப்படம் மிகுந்திருக்கிறது. இந்த கலப்பட உணவுகள் பெரும்பாலும் கல்லீரலை பாதிக்க செய்கின்றன. இந்த கல்லீரல் பாதிப்பு குறைக்கும் அருமருந்தாக இந்த ஈரல் நோய்தீக்கும் கஷாயம் உதவும். இது நறுமணமாக இருக்கும்.

கல்லீரல் நோய் தீர்க்கும் கஷாயம் நன்மைகள் :

இன்று கல்லீரல் நோய் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் அதிகமாக மதுப்பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கல்லீரல்
பாதிப்பு ஏற்படும். உடலில் சில வகையான வைரல் தொற்று கொண்டிருந்தவர்களுக்கு கல்லீரல் தொற்று ஏற்படுவதை பார்க்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இந்த கல்லீரல் தொற்று பலரையும் பாதித்துவருவதை பார்க்க முடிகிறது. கல்லீரல் நோய்கள் ஏன் உண்டாகிறது, கல்லீரல் ஏன் பாதிக்கிறது என்பது குறித்து அறிய வேண்டும்.



Top Post Ad

Below Post Ad