ஆம்பூர் அருகே ரூ.80 கோடி பணத்துடன் கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. லாரி பழுதுக்கு என்ன காரணம் என்று முதலில் தெரியாததால் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸார் உடனடியாக ‘அலர்ட்’ ஆகி துப்பாக்கி ஏந்தி நின்றனர்.