Type Here to Get Search Results !

கிறிஸ்துமஸ்பண்டிகையின் வரலாறு


கிறிஸ்துமஸ் என்றவார்த்தை

 "கிறிஸ்ட் மாஸ்"என்ற 2 

வார்த்தைகளின்இணைப்பு  மூலம்உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்டகாலத்தில்  அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.அதேபோலவே யூதர்களின்பருவகாலம், நாள்  காட்டிகள்மூலம் கணக்கிட்டு, ஒரு யூகஅடிப்படையில் தான் டிசம்பர்25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக  சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்தமேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சிலபிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்குமறுப்பு தெரிவித்து, ஜனவரி6ம் தேதி  இயேசுபிறந்ததாகவும்கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச்சிறப்பான நாளாககொண்டாடி மகிழ்கின்றனர்.இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால்அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம்ஆண்டு இட்முண்ட்  என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம்ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார்.மேலும் 1377ம் ஆண்டுஇங்கிலாந்து மன்னன்ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாககொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு"என்று பெயரிடப்பட்டது.இப்படி  கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றுமகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள பரிசுப்பொருட்களை பரிமாறிகொள்வதும், போட்டிகளைநடத்துவது என்று பலகோணங்களில்கொண்டாட்டம்விரிவடைந்தது.கிறிஸ்துமஸ்பண்டிகைக்காகமுதன்முதலில் கிறிஸ்துமஸ்மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்றஇடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டுகிறிஸ்துமஸ் பண்டிகைக்குஅலபாமா என்ற பகுதியில்அரசு விடுமுறையாகஅறிவிக்கப்பட்டது. 1840ம்ஆண்டு இங்கிலாந்தில்முதன் முதலாககிறிஸ்துமஸ் வாழ்த்துஅட்டைகள் அனுப்பும்வழக்கம் துவங்கியது.கிறிஸ்துமஸ்பண்டிகையின் போதுகிறிஸ்துவர்கள்குழுக்களாக சேர்ந்து கேரல்சர்வீஸ் என்ற நிகழ்ச்சியைநடத்துகின்றனர். இந்தகேரல் நிகழ்ச்சியில்குழந்தை இயேசுவைவாழ்த்தியும், அவரது பிறப்பு,அவர் உலகில் வந்தநோக்கம் உள்ளிட்டகருத்துகளை கொண்டபாடல்கள் பாடப்படுவதுவழக்கம். கடந்த 1847ம்ஆண்டு பிரான்சில் தான்முதல் முதலாககிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ்நடத்தப்பட்டதாக தெரிகிறது.இந்த கேரலில் "ஓ ஹோலிநைட்" என்ற பிரபலகிறிஸ்துமஸ் பாடல்பாடப்பட்டதாககூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையைஓட்டி வரலாற்றில் சிலருசிகரமான சம்பவங்கள்நடைபெற்று உள்ளன.பண்டைய காலத்தில்வாழ்ந்த பாரசீகர்களும்,பாபிலோனியர்களும்கிறிஸ்துமஸ் பண்டிகையைவருடத்தின் நல்ல நாளாககொண்டாடி வந்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகைஅன்று, பாரசீக நாட்டில்உள்ள எல்லாஅடிமைகளுக்கும் ஒருநாள்விடுதலை அளிக்கப்படும்.மேலும் சிலர் தங்கள்அடிமைகளை பரிசாகபரிமாறி கொண்டனர். சிலஎஜமான்கள் கிறிஸ்துமஸ்பண்டிகை அன்று மட்டும்,அடிமைகளுக்கு வீ்ட்டில் முழுசுதந்திரம் கொடுத்ததாகவும்வரலாற்றில் குறிப்புகள்உள்ளது. பண்டையகாலத்தில் வாழ்ந்தஐரோப்பியர்களுக்கு பேய்,பிசாசு, அசுத்த ஆவிகள்உள்ளிட்டவைகளுக்குஅதிகமாக பயந்தனர்.வருடத்தில் நீண்ட இரவுகொண்ட நாட்களில் அவைமக்களுக்கு தீமைவிளைவிக்கும் என்றுநம்பினர். இதனால் நீண்டஇரவுகளுக்கு பிறகுசூரியன் உதிக்க வேண்டும்என்பதற்காக கிறிஸ்துமஸ்பண்டிகையை கொண்டாடிவந்துள்ளனர். மொத்தத்தில் நல்லதுஓங்கவும், அல்லதுஅழியவும் இந்த நன்னாளைஉலக மக்கள் அனைவரும்ஒருங்கிணைந்து இயேசுபெருமானை இறைஞ்சி,துதி பாடி மகிழ்கின்றனர்என்பது சந்தோஷமானவிஷயம்தான்

Top Post Ad

Below Post Ad