Type Here to Get Search Results !

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி காற் றழுத்த தாழ்வு நிலை உருவாகி யுள்ள நிலையில், வரும் 20-ம் தேதி முதல் தமிழக கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலு குறைந்துள்ளது. 

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத் தில் நாளை (20-ம் தேதி) வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

தொடர்ந்து 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய லாம் என்றும், 22-ம் தேதி அநேக இடங்களில் மழைக்கு வாய்ப் பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad