இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது கோயல் கூறுகையில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
ரூ. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. இதன் மூலம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலனடைவர். தனி நபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தரக் கழிவுக்கான உச்சவரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.