Type Here to Get Search Results !

"மே.19ம் தேதி இடைத் தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்"








மே.19ம் தேதி நடக்கும் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மே 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு 'நடு விரலில் மை' வைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர்சத்யப்பிரதா சாஹூ கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்யப்பிரதா சாஹூ கூறுகையில், '' வரும், ஏப்.18 ல் தமிழகத்தில் 39 எம்.பி.,தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நடக்கின்றன. 

அடுத்து மீதி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலுார் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே 19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட 4 தொகுதி வாக்காளர்களும் ஏப்ரல் 18 அன்றே வாக்களிப்பர் என்பதால், அவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருக்கும். அது அழியாத மை என்பதால், மே 19 நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்,'' என்றார்.




Top Post Ad

Below Post Ad