Type Here to Get Search Results !

ரூ.778 கோடிக்கு ஏலம் போன வைக்கோல் ஓவியம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார். கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஓவியம் வெவ்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது. ஏலம் தொடங்கிய 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.778 கோடி) ஏலம் போனது. இந்த ஓவியம் 100 மில்லியன் டாலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். கிளாட் மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad