Type Here to Get Search Results !

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்



டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் அவர், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும் என தெரிவித்தார்.

இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு அடுத்த மூன்று தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழ சேர்வையில் 15 சென்டிமீட்டர் மழையும்,

பாம்பன், மதுரை மாவட்டம் விரகனூரில் தலா 11 சென்டிமீட்டரும் மழையும் பெய்துள்ளது. மேலும், ராமேஸ்வரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Top Post Ad

Below Post Ad