Type Here to Get Search Results !

காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு




 


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. வடமாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது குறைந்து, வறண்ட வானிலை நிலவியது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது. தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 70 மிமீ மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய பகுதியில் காற்றழுத்தம் நிலை கொண்டு இருப்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad