குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாக பிரித்த பின் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன் அதற்கான லிஸ்ட்டை எப்.பி.ஐ மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றம். தற்போது வந்துள்ள இந்த லிஸ்ட் இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும். இந்த லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது போன்று போலீசார் செல்போனில் அழைத்து விசாரிக்க மாட்டார்கள். அவர்கள், நேரில் அழைத்து தான் விசாரணை செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது, குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ‘‘3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப் படுவார்கள்’’ என்று தெரிவித்தனர். எனவே இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள். அப்படி பேசினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் தெரிவித்தனர்.