Type Here to Get Search Results !

சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனிப் பிரிவு



சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

உயர் பதவிகளில் இருப்போர் மீது சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கானது வியாழன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், 'பொதுவாகவே சமூக வலைத்தளங்களால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைப் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, குறிப்பாக உயர் பதவிகளில் இருப்போர் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தினர்.

Top Post Ad

Below Post Ad