Type Here to Get Search Results !

ஐபி​எல் 2020 தொடக்க விழா ரத்து! தொடர் பரி​சுத் தொகை 50% குறைப்பு!!


ஐபி​எல் 2020-இல் பரி​சுத் தொகையை பாதி​யாக குறைக்க பிசி​சிஐ முடிவு செய்​துள்​ளது. செல​வைக் கட்டுப்​ப​டுத்​தும் ஒரு வகை​யாக இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது.

உல​கி​லேயே
அதிக பொருள்​செ​ல​வில் நடத்​தப்​ப​டும் கிரிக்கெட் லீக் போட்டி​யாக ஐபி​எல் உள்​ள​து.​இந்​நி​லை​யில் வரும் 29-ஆம் தேதி மும்​பை​யில் 2020 ஐபி​எல் போட்டித் தொடர் ஆரம்​பா​கி​றது.
இந்​நி​லை​யில் பொரு​ளா​தார மந்​த​நிலை உல​கி​லேயே பணக்​கார விளை​யாட்டு அமைப்​பு​க​ளில் ஒன்​றான பிசி​சி​ஐ​யை​யும் விட்டு வைக்​க​வில்லை. இத​னால் பல்​வேறு செல​வுக் கட்டுப்​பா​டு​களை மேற்​கொள்ள அதன் நிர்​வா​கம் தீர்​மா​னித்​துள்​ளது.
இது​தொ​டர்​பாக சுற்​ற​றிக்கை ஒன்றை ஐபி​எல் அணி​கள் மற்​றும் பங்​கு​தா​ரர்​க​ளுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

​தொடக்க விழா ர​த்து:
2020 சீச​னில் தொடக்க விழா நிகழ்ச்சி நடை​பெ​றாது. மேலும் பிளே ஆஃப் சுற்று நிதி​யும் குறைக்​கப்​ப​டும்.
​ப​ரி​சுத் தொகை 50 சத​மாக குறைப்பு: அதே போல் பட்டம் வெல்​லும் அணிக்​கும், 2, 3, 4ஆம் இடங்​க​ளைப் பெறும் அணி​க​ளுக்​கும் தரப்​ப​டும் பரி​சுத் தொகை 50 சத​வீ​த​மாக குறைக்​கப்​ப​டு​கி​றது.
​சாம்​பி​யன் அணிக்கு ரூ.10 கோடி: சாம்​பி​ய​னுக்கு ரூ.10 கோடி, ரன்​னர் அப்​புக்கு ரூ.6.25 கோடி, 3, 4ஆவது இடம் பெறும் அணி​க​ளுக்கு தலா ரூ.4.375 கோடி பரி​சுத் தொகை தரப்​ப​டும்.
​க​டந்த 2019 சீச​னில் ரூ.20 கோ​டி​: கடந்த 2019 சீச​னில் சாம்​பி​யன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.20 கோ​டி​யும், ரன்​னர் அபப்​புக்கு ரூ.12.5 கோ​டி​யும், 3,4 ஆம் இட அணி​க​ளுக்கு தலா ரூ.8.75 கோ​டி​யும் பரி​சுத் தொகை​யாக தரப்​பட்​டன. மேலும் போட்டி நடத்​தும் மைதா​னங்​க​ளுக்கா தொடர்​பு​டைய மாநில சங்​கங்​க​ளுக்கு அணி​கள் தந்த ரூ.30 லட்​சம் தற்​போது ரூ.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. பிசி​சி​ஐ​யும் இதே தொகையை தரு​கி​றது. இத​னால் ஒவ்​வொரு ஐபி​எல் ஆட்டத்​துக்​கா​க​வும் மாநில சங்​கம் ரூ.1 கோ​டியை பெறும்.

தானாக நோபால் அறி​விப்பு வெளி​யி​டும் முடிவு கைவி​டப்​ப​டு​கி​றது. மூன்​றாம் நடு​வரே நோபால்​களை கண்​கா​ணிப்​பார்.மேலும் பிசி​சிஐ நிர்​வா​கி​கள் விமா​னத்​தில் பய​ணிக்​க​வும் கட்டுப்​பா​டு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

Top Post Ad

Below Post Ad