Type Here to Get Search Results !

உஷார்., தப்பித் தவறி கூட whatsapp-ல இதை பண்ணாதீங்க! எச்சரிக்கை தகவல்


சமூகவலைதளங்களில் பிரதானமான ஒன்றாக கருதப்படுவது வாட்ஸ் ஆப், தற்போது வாட்ஸ் ஆப் என்பது மிக முக்கியமான செயலியாக உருவெடுத்துள்ளது. இந்த செயலி அலுவலகம் முதல் குடும்பங்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகவலைதளங்களை பொருத்த வரையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பெரும்பாலானோர் தங்களது சுய விவரங்களை குறிப்பிட்டு இருப்பார்கள். இதன்மூலம் தங்களது அனுமதியின்றி தங்களது முழுவிவரங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம். அதேபோல் தங்களின் போன் நம்பர் தெரிந்தால் போதும் நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ், புகைப்படம் என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் ஹேக்கர்கள் ஊடுருவலும் நடக்கலாம் எனவே பாதுகாப்பு என்பது மிக முக்கியம்.

உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் அனைவரையும் வரவேற்க வேண்டாம். உங்கள் காண்டெக்ட்டில் இருந்து பொருத்தமற்ற நபர்களை நீக்குவது நல்லது. அதேபோல் தேவையில்லாத நபர்கள் அல்லது முகம் தெரியாத நபர்களை பிளாக் செய்து வைப்பது நல்லது. அதேபோல் அவ்வப்போது தங்களது கான்டாக்ட்டில் தேவையில்லாம சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நம்பரை டெலிட் செய்வது நல்லது.


வாட்ஸ் ஆப்பில் டிபி, புரபைல் இமேஜ் எனப்படும் சுயவிவரப்படத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது சிறப்பு. அதேபோல் தங்கள் வைத்திருக்கும் படம் தங்களது முழுவிவரத்தையும் எடுத்துச் சொல்பனவாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் உங்கள் வாட்ஸ் ஆப் சுயவிவர புகைப்படத்தை உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள அனைவராலும் காணலாம். இருப்பினும், உங்கள் சுயவிவர புகைப்படத்தை யார் காணலாம் என்பதற்கு தனியுரிமை விருப்பங்களும் உள்ளன.


எல்லோரும் (அதாவது அனைத்து வாட்ஸ் ஆப் பயனர்களும்), எனது தொடர்புகள் (உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள்) மற்றும் குறிப்பிட்ட நபர்கள் (இது எந்த புகைப்படத்தையும் காண்பிக்காது). இதன்மூலம் தங்களின் சுயவிவரப் புகைப்படத்தை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

ஸ்டேட்டஸ்-ல் நமது குடும்பத்தோடு வெளியே சென்றது, நண்பர்களோடு சென்றது என அனைத்தையும் பதிவிடுகையில் பாதுகாப்பு தேவை. இதை status with everyone என்று காண்பிக்கும். இதன்மூலம் தங்களது ஸ்டேட்டஸை அனைவரும் காணலாம்.

அதேபோல் தனது கான்டாக்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் கான்டாக்டில் உள்ளவர்கள் பார்க்கும் படி வைக்கலாம். அதேபோல் இதிலும் தேவையில்லாதவர்களை நிரந்தரமாக பிளாக் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்கும்படி அவர்களின் பெயரை டிக் செய்து வைக்கலாம்.

தங்களின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப்பில் எல்லோரும் இணைக்கும்படி பயன்படுத்த வேண்டாம். யாராவது ஒரு நபர் மூலமாக தேவையில்லா நபர்கள் குழுவில் வந்தால் அது மிகவும் ஊடுருவல்களை ஏற்படுத்தும். எனவே வாட்ஸ் ஆப் குழுவை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காவல்துறையினர் விசாரணைப்படி ஒரு போலி தகவல் பரவினால் அது எந்த மொபைல் மூலம் பரவத் தொடங்கியது என்பதை ஐஎம்இஐ மூலம் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் எனவே பாதுகாப்பு தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மற்றும் பிறருக்கு பகிர்ந்து கொள்வது நல்லது.


சமீபத்தில் ஆபாச படம் தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள சைபர் கிரைம் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது வாட்ஸ் ஆப் மட்டுமின்றி எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் ஆபாச படங்கள், வன்முறை வீடியோ, தடை செய்யப்பட்ட வீடியோ உள்ளிட்டவைகளை பகிர்ந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

Top Post Ad

Below Post Ad