Type Here to Get Search Results !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா



❖ செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியாகத் துபாய்க்குச் சென்றுள்ளன. அங்கு கொரோனா நோய்த் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் துபாய் சென்றடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

❖ இந்த சோதனையில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் ஒரு வாரத்துக்குத் தனிமையில் இருக்க சி.எஸ்.கே அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad