Type Here to Get Search Results !

தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்.


*மனதை தொட்ட பதிவு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....
*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....

*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,

*இல்லையேப்பா..,
*நல்லா தானே இருக்கு" என்பார்.

*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க.. 
*"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!*

 *"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு
சொல்லி டிராமா போடறீங்க"

 உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்....., 

*"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!

ஆனாலும்...,
 *"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,
 *" தினம்
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்"......!!

*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,

அந்த பாட்டியிடம்,

*"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்".....!!

 *"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்"....?

 உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு...., 

*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,

*"கொடுத்து சாப்பிட வைக்கிறான்"......!!

*இது எனக்கு தெரியாது என்று
*நினைக்கிறான்...!!

*"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை"..!!

 மாறாக...
 *" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது"...
என்றார் அன்போடு....,

*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்
*ஜீவன் இன்னும் இருக்கு.....!!

*"அன்பை விதையுங்கள்"....!!

*" *அதையே அறுவடை செய்வீர்கள்".......!!

Top Post Ad

Below Post Ad