Type Here to Get Search Results !

நாகையில் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா- ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது


நாகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்எல்ஏ ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ஆட்சியர் அலுவலகம் இன்றும் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Maalaimalar

Top Post Ad

Below Post Ad