Type Here to Get Search Results !

பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி? விதிமுறைகள் என்ன? - வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு..



அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி? விதிமுறைகள் என்ன? - வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு..

திரையரங்கங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு, அடுத்த 3 மாதங்களில் வர இருக்கும் பண்டிகைகளை கொண்டாடுவது எப்படி? என்பது குறித்த விதிமுறைகளையும் நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் நாடு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு, பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால்,  5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்துள்ளது.

துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஜனவரியில் பொங்கல் பண்டிகை என பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், கொரோனா காலத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

1. பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

2. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நாள்பட்ட வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. பண்டிகை காலத்தில் பாடகர்கள் அல்லது பாடகர் குழுக்களுக்கு வெளியிடங்களில் இசைக்க அனுமதி இல்லை.

4. தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, கொண்டாட்ட இடங்கள், பொதுமக்கள் பார்வையிடக்கூடிய அனைத்து இடங்களிலும் அறிகுறியற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும். காலியாக விடப்படும் இருக்கைகளில், ‘அமரக்கூடாது’ என்று எழுதி வைக்க வேண்டும்.

5. பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றுக்கான இடங்களை அடையாளம் காண வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் மக்கள் வரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

6. நீண்ட தூரங்களுக்கு பேரணி, ஊர்வலம் நடத்துகிறபோது, ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.

7. கண்காட்சிகள், பூஜை பந்தல்கள், ராம்லீலா போன்ற நிகழ்வுகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள், பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை கொண்டே நடத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

8.  பந்தல்கள், உணவு பரிமாறும் கூடங்கள் போன்றவற்றில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைக்க வேண்டும். கடைகள், ஸ்டால்கள், சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் எல்லா நேரங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

9. சமூக சமையலறைகள், அன்னதான நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

10. நாடக மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.

11. கொண்டாட்ட நிகழ்விடங்களில் துப்புரவு பணியாளர்கள், வெப்ப பரிசோதனையாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுடன், தரையில் தனி மனித இடைவெளி அடையாளங்களை வரைந்திருக்க வேண்டும்.

12.  யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் என கண்டறியப்பட்டால், அந்த வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

13. தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், முகக்கவசம் அணிவதையும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

14. யாரும் எச்சில் துப்பக்கூடாது.

15. அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


Top Post Ad

Below Post Ad