Type Here to Get Search Results !

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி (16-11-2020) நேரத்தில் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிடு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 72 மணி (17-11-2020) நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் ,புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையு, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டிபதிவாகக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source Dinathanthi

Top Post Ad

Below Post Ad