Type Here to Get Search Results !

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்



வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக, தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
 “குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். 
 திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை (15.11.2020) வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
 கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை மறுநாள் (16.11.2020) தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
 அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 
 மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.
 இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
        

Top Post Ad

Below Post Ad