Type Here to Get Search Results !

நிவர் புயல்: மெட்ரோ ரயில் சேவை 7 மணியுடன் நிறுத்தம்

நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7 மணியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது:
 "காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மெட்ரோ ரயில் சேவை பகுதி 1 (வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்) வரை 4.30 மணி முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடைசி மெட்ரோ ரயில்கள் இரவு 7 மணிக்கு இயக்கப்படுகிறது. இதன்மூலம், மெட்ரோ ரயில் சேவை 8 மணிக்கு நிறைவடைகிறது. வானிலை பொறுத்தே மீண்டும் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்."
 முன்னதாக, மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
 Source Dinamani

Top Post Ad

Below Post Ad