Type Here to Get Search Results !

காய்கறி கவிதை





தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில்
எக்காலும் நோயில்லை காண் .

எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் 
எலும்புக்கு வலு சேர்க்குமே .

வெங்காய மில்லாச் சாம்பார் எஞ்ஞான்றும்  
தங்காதே நாவில் ருசி .
பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே 
புடலங்காய் போற்றிச் சுவை .

தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் 
முள்ளங்கி மூன்றினை த்தான். 

வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் 
தொண்டையில் இறங்காது காண் .

வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் 
வாழாதார் என்பது வழக்கு .   

கத்திரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் 
இத்தரையில் பித்தருக்குச் சமமெனக்கொள் .

பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் 
புகழோடு வாழ்வார் அவர் .

காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் 
நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.

முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் வேறெல்லாம் 
வெறுங்கையில் முழம் போடுவர் .

காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள 
கரிசலாங் கண்ணியைச் சேர் .

இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் 
கரும்பைப் போய் விரும்பிச்சுவை . 

உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயமென்றாலும் 
செரிக்குமோ உரிக்காவிடில்.

பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் 
பலனது வேண்டுமெனில்

பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார்
சோகத்தில் சேர்ந்து விழும்.

வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் 
ஒரு துண்டு சேர்த்துச்சமை .   

வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் 
தாழ்வேனெவே எண்ணு பவர்.
கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் 
தேரை வாழ்ந்த கதை .

பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் 
பீட்ரூட்டை உணவில் சமை.

கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம்  
சத்தே என சரியாய் உணர் . 
கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் 
சொறி பிடித்தோடுவார் காண் .

பொன்னிற மேனி வேண்டுமெனில் நீயந்த 
பொன்னாங் கண்ணியைச் சேர் . 

கண் இருந்தும் குருடரே காசினியில் 
காய் கறியை உண்ணாதவர்


Top Post Ad

Below Post Ad