Type Here to Get Search Results !

இரத்தம் பற்றிய அரிய தகவல்கள்!




1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாகஉள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின்உள்ளே “ஹீமோகுளோபின்” என்றவேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்புநிறத்தைக் கொடுக்கிறது.ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ளஅனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனைஎடுத்துச் செல்கிறது.ரத்தத்தில்ஹீமோகுளோபின்எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகைநோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்தஇழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்புஅணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின்எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்தசிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவதுசென்னையின் மக்கள் தொகைக்குஏறக்குறைய இணையான அளவுக்குஇருக்கும்.

3. ரத்த சிவப்பு அணுக்கள்உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம்இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றிஎலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்புமஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள்உற்பத்தியாகின்றன.

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள்எவ்வளவு?

இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள்நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்புஅணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின்உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்துஅதிகம். இவற்றை உணவில் தினமும்சேர்த்துக் கொண்டால் ரத்த சோகைவராது.

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலைஎன்ன?

ரத்த வெள்ளை அணுக்களைபடைவீரர்கள் என்று அழைக்கலாம்.ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை முதலில் எதிர்த்துப்போராடுபவை ரத்த வெள்ளைஅணுக்களே. இவை நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம

5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலைஎன்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம்வெளியேறுவதை இயற்கையாகவேதடுக்கும்சக்தி"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு.ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்திமேலும் ரத்தக் கசிவை இவைதடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியாகாய்ச்சலால் பாதிக்கப்படும்நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட்அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

6. பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான்பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில்சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்புஅணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில்தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறையவைக்கக்கூடிய காரணிகள், புரதப்பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால்பாதிக்கப்படும் நோயாளிகளுக்குபிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

7. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளைஅணுக்கள், பிளேட்லட்டுகள் எனரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள்உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

8.உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம்எவ்வளவு தெரியுமா?

ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும்தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள்செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின்சராசரி வேகத்தை விட அதிகம்.


Top Post Ad

Below Post Ad