Type Here to Get Search Results !

தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பு மனு தாக்கல் இந்த தொகுதியில்தான்!




மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

கரூர் தொகுதியில் வழக்கத்திற்கு மாறாக 90 வேட்பாளர்கள் 97 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 


தமிழக அளவில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், இந்நாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிடுகிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. 

Top Post Ad

Below Post Ad