Type Here to Get Search Results !

குறட்டை வர காரணமும் இயற்கை முறையில் தீர்வும்...!!!



தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை விடுவதால் அருகில் உள்ளவர்களுக்கும் தூக்கம் கெடுகிறது.

✍️உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும். மது அருந்துவதால் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மதுவை தவிர்க்கவும்.

✍️நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம்.

✍️தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீரான சுவாசம் கிடைக்கும்.

✍️புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகும். குறட்டை தொல்லை அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும்.

✍️தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும்.

✍️இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும். இது தொண்டைக்கு இதமளிக்கும்.

✍️ஏலக்காய், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புக்களை நீக்கி நெஞ்சு சளியை குறைக்கும். குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

✍️2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

✍️இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சில நிமிடங்கள் நுகர்ந்து வாருங்கள். இதன் நறுமணம் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

Top Post Ad

Below Post Ad