பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார். 70 வயதான இவர் திருக்குறள் மீதான பற்றால் வருடா வருடமும் திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார். கடைக்கு வருபவர்களுக்கு திருக்குறளை கூறி அதற்கான பொருளை விளக்கி வருகிறார். இதனால் அவரை திருக்குறள் தாத்தா என மக்கள் அழைக்கின்றனர்.