'டிக் டாக்' செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்” என்று சட்டசபையில் தமீமுன் அன்சாரி விடுத்த கோரிக்கைக்கு, டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. விவாதத்தின் மீது இன்று பேசிய எம்.எல்.ஏ, தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.