ஊட்டி நகரில் நேற்று இரவு கரடி ஒன்று உலவியது. இதுகுறித்து இன்று காலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலை 6 மணியளவில் தகவல் தெரிவித்து மதியம் இரண்டு மணிக்கே வன கால்நடை மருத்துவர் வந்து சேர்ந்தார்.
10 மணி நேர போராட்டத்துக்குப் பின் கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.