Type Here to Get Search Results !

விரைவில் புதிய ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய ரூ.20 நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டு பச்சை நிறத்தில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்துடனும், மறுபக்கம் எல்லோரா குகைகளின் படத்துடனும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.10 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி...


பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.


இது குறித்த அதன் அறிக்கையில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள் பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad