உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானலில் வீதிமீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ஆன்லைன் மூலம் உறுதி செய்து கொண்டு பயணத்தைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் அதிகமாக கட்டணம் வசூல் செய்யும் தங்கும் விடுதிகள் மீது சுற்றுலாப்பயணிகள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாப்பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து போலீசாருக்கு சுற்றுலாப்பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்கவும் கோரிக்கை காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.