Type Here to Get Search Results !

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்

2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) எழுப்பப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.


Top Post Ad

Below Post Ad