நெரிசலை தவிர்ப்பதற்காக, உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் மட்டும் அடுத்த 30 நாட்களுக்கு பாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் நெரிசலைத் தவிர்ப்பதற்காவும், வாகனங்கள் விரைவாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காகவும், முறைகேடுகளை தவிர்த்து ஆன்லைன் கட்டண முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பாஸ்டாக் முறையை நேற்று முதல் கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டது.
இதன்படி 537 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் 75 சதவிகித பாதைகள் பாஸ்டேக் ஒட்டிய வாகனங்களுக்கும், 25 சதவிகித பாதைகள் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.