வங்கிகளுக்கு பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் சிரமத்தை போக்க ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பப்பட்டுள்ளது.பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து, நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பொங்கலையொட்டி வங்கிகளுக்கு வரும்,19ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் பாதிக்காத வகையில் பணம் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகள்நடவடிக்கை எடுத்துள்ளன. குறிப்பாக, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமம் இன்றி பணத் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.அதன்படி, நேற்று, மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்களுக்கு தனியார் அமைப்புகள் வாகனம் மூலம் பணம் எடுத்து சென்று, நிரப்பியுள்ளன.வங்கி அதிகாரிகள் கூறுகையில்,பொங்கல் பண்டிகையையொட்டி, மலை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி பணம் தேவையை பூர்த்தி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்., மையங் களில் தேவைக்கு ஏற்ப பணம் நிரப்பப்பட்டுள்ளது. பணம் தீர்ந்தாலும் உடனுக்குடன் நிரப்பவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,என்றார்.
பொங்கல்: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏ.டி.எம்.,ல் நிரம்பியது பணம்
Tags