Type Here to Get Search Results !

பாராசிட்டமால் உட்பட 26 மருந்துகளை ஏற்றுமதி செய்யத் தடை




கொரோனா வைரஸ் சிகிச்சையை முன்னிட்டு இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் 26 மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஜெய்ப்பூர் வந்துள்ள இத்தாலியைச் சேர்ந்த சுற்றுப் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தென்கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரானிலிருந்உத இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வர தடை போப்பட்ட நிலையில், தற்போது புதிதாக நான்கு நாடுகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படுவதுடன் புதிய விசா வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 26 மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் நிலையில் அதிகம் தேவைப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தட்பவெப்பத்தால் கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்குமா இந்தியா? பாரசிட்டமால், குரோமாபெனிகால், மெட்ரோனிடாக்சோல் உள்ளிட்ட 26 மருந்துகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தடை செய்யப்படுகிறது. இன்று முதலே இந்தத் தடை அமலுக்கு வருகிறது. தடை செய்யப்பட்டுள்ள 26 மருத்துகள் ஒட்டுமொத்த மருந்து ஏற்றுமதியில் 10 சதவீதம் ஆகும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படது. இந்தியாவின் மருத்து உற்பத்திக்குத் தேவையான சமார் 70 சதவீதம் மூலப் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. சீனாவிலிருந்து இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் மருந்து தயாரிப்பில் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவைத் தடுக்க நான்கு நாடுகளுக்கு விசா ரத்து


Top Post Ad

Below Post Ad