Type Here to Get Search Results !

அனைத்து நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கும் சீருடை - தமிழக அரசு


அனைத்து நியாய விலைகடை ஊழியர்களுக்கும் சீருடை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் பணிபுரியும், நேரடி ஊழியர்களுக்கு சீருடை வழங்கவும், அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.





மேலும், சேவைத்திட்டங்கள் அறிவிக்கப்படும் போது கூடுதல் பணிச் சுமை இருந்தால் அட்டைக்கு 50 பைசா கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்றும், அடிப்படை விதிகள் அவர்களுக்கு பொருந்தாது என்றும், இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Top Post Ad

Below Post Ad