Type Here to Get Search Results !

தனிமையே இனிமை பெருமை - கொரோனா கவிதை



ஞாயிறு
விடிந்தால்
இந்தியாவில்
ஊரடங்கு

ஒருநாள்
மட்டும்
வீட்டில்
அடங்கு

எங்கிருந்தோ
வருகிறது
கொடிய
கிருமி

பரப்பி
விடாதே
நீ
இருமி

வாழத்தான்
பிறந்தோம்
மண்ணில்

அலட்சியம்
வேண்டாம்
உன்னில்

உன்
உயிர்
காக்க
துடிக்கிறது
எத்தனையோ
துறை

நீ
மட்டும்
சொல்லி
திரியலாமா
ஊரெல்வாம்
குறை

விரலால்
கூட
பிறரை
தொடாதே

வீம்பாக
இருந்தால்
நோய்
உன்னை
விடாதே

கண்
காது
மூக்கு
ஐம்புலன்

விரலால்
தொடாமல்
இருப்பதே
பெரும்பலன்

கிருமிகள்
இருக்கும்
கண்ணுக்கு
தெரியாமல்

இருக்க
வேண்டாம்
அது
மட்டும்
புரியாமல்

கழுவுவோம்
சோப்பினால்
கையை

காத்திடுவோம்
நோயின்றி
மெய்யை

காற்றில்
தண்ணீரில்
பரவாது

தொட்டால்
விரல்
பட்டால்
பரவும்

உலகம்
முழுவதும்
எத்தனையோ
பலி

நமக்குள்
இருக்கட்டும்
ஒரு
மீட்டர்
இடைவெளி

நம்
உயிர்
காக்க
தவிக்கிறார்
பிரதமர்

அவர்
தான்
நம்மை
காக்கும்
பிதாமகர்

உறக்கம்
மறந்து
உழைக்கிறார்
முதல்வர்

தமிழ்
தாய்
ஈன்றெடுத்த
புதல்வர்

தனிமைபடு
மார்ச்
இருபத்து
இரண்டு

கிருமியை
விரட்டும்
எண்ணம்
மனதில்
கொண்டு

அடங்கு
அடங்கு
வீட்டில்

நன்றாய்
வாழலாம்
நாட்டில்

இது
நம்
உயிர்
காக்கும்
யுத்தம்

இப்போதைய
முழு
முதல்
தேவை
தன்சுத்தம்

இனிமை
தரட்டும்
தனிமை

தாய்
நாட்டுக்கு
கிடைக்கும்
பெருமை
______________________

Top Post Ad

Below Post Ad