Type Here to Get Search Results !

இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம்


ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.





அத்துறையின் ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், பயோ மெட்ரிக் திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் நடைமுறை, பரீட்சார்த்த முறையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும், பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





பயோமெட்ரிக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குடும்ப அட்டையில் உள்ள நபர்களை, தவிர மற்ற நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்ட பின்னரே, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது



Top Post Ad

Below Post Ad