Type Here to Get Search Results !

வாட்ஸ்-அப் செயலி மூலம் புதிய மோசடி-எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை

வாட்ஸ்-அப் செயலி மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், வங்கி சார்பில் நடத்தப்பட்ட லாட்டரி அல்லது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் போட்டியில் பரிசு பெற்றதாகக் கூறி, குறிப்பிட்ட எண்ணை தொடர்புகொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குறுந்தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், வங்கித் தரப்பில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் கேட்கப்பட மாட்டாது எனவும், எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad