Type Here to Get Search Results !

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணத்தை, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad