Type Here to Get Search Results !

தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை - டி.ஜி.பி உத்தரவு


தமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை - டி.ஜி.பி உத்தரவு

தமிழகத்தில் காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக புகார்கள் இருந்துவருகின்றன. குறிப்பாக, தற்போது கொரோனா கால சூழலில் ஓய்வின்றி பணிகள் தொடர்ந்து இருந்துவந்தது.  இந்தநிலையில், காவல்துறையினருக்கு விடுமைற வழங்குவது தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின்படி, தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சென்னை தவிர்த்து அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். பணிச்சுமை, மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் வார விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு, பணிச்சுமை காரணமாக தற்கொலை, மாரடைப்பு என காவல்துறையினர் இறந்ததாலும், அவர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்ததாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad