Type Here to Get Search Results !

வங்கக்கடலில் புதிய புயலால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

அது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வரும் 3-ம் தேதி முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Top Post Ad

Below Post Ad