Type Here to Get Search Results !

படித்ததில் ரசித்தது

🌼💫குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.
.
"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
.
என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.
.
என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.
.
புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...
.
"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.
.
தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
.
அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.
.
உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.
.
அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.
.
அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.
.
இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.
.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.
.
*உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு.
.


Top Post Ad

Below Post Ad