Type Here to Get Search Results !

உத்தரகண்ட் : பனிச்சரிவால் வெள்ளப்பெருக்கு 150 பேர் உயிரிழப்பு என அச்சம்

உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 150 பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் தவுளிகங்கா ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 150 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரக்கண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அதிகப் பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாளங்கள் திடீரெனச் சரிந்தன. பனிப்பாளங்கள் உருகித் தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிவேகத்தில் வந்த வெள்ளத்தால் அணை உடைந்ததில் ரிசிகங்கா நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தவுளிகங்கா, அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மக்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரக்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்தது. எனினும் நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், கரையோரப் பகுதி மக்கள் என நூறு முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கரையோரத்தில் உள்ள சமோலி, ஜோசிமத் உள்ளிட்ட பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்க விமானப்படையின் ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை பற்றி உத்தரக்கண்ட் முதலமைச்சரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா ஆகியோர் மீட்பு நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.




Tags

Top Post Ad

Below Post Ad