Type Here to Get Search Results !

சில்லி இறால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம்.






தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* இறால் - 3/4 கிலோ

* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

* கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

* உப்பு - சுவைக்கேற்ப

வதக்குவதற்கு...

* நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்

* கறிவேப்பிலை - சிறிது

* நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

* சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி தனியாக ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகா சேர்த்து நன்கு வதக்கி, பின் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியால் மூடி குறைவான தீயில் இறாலை வேக வைக்க வேண்டும்.

* இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இறாலைக் கிளறி விட்டு, மீண்டும் 2 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.

* இறால் நன்கு வெந்ததும், அதன் மேல் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி இறால் தயார்.




Top Post Ad

Below Post Ad