Type Here to Get Search Results !

இனிமேல் தான் தீவிரம் காட்டப் போகுது- விஸ்வரூபம் எடுக்கும் பருவமழை!

மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் தமிழக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே நடப்பாண்டிற்கான பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகப்படியான நீரை வாரி வழங்கியது. இதனால் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்த தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

புரட்டி எடுக்கும் கனமழை; இத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

இதனைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

அதுவும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பெய்து வந்த மழையால் சேலம், ராமநாதபுரம், நீலகிரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

உச்சத்தை நெருங்கிய பவானிசாகர் அணை; பாதுகாப்பு கருதி நீர்திறப்பு அதிகரிப்பு!

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். ஏற்கனவே கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது.

தாங்குமா தமிழகம்; இனிமேல் தான் தீவிரம் காட்டப் போகுது- விஸ்வரூபம் எடுக்கும் பருவமழை!

மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* வேலூர்
* திருவள்ளூர்
* திருவண்ணாமலை
* காஞ்சிபுரம்

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ராமநாதபுரம்
* பெரம்பலூர்
* அரியலூர்
* சிவகங்கை
* மதுரை
* புதுச்சேரி
* கிருஷ்ணகிரி
* நாமக்கல்
* சேலம்
* கடலூர்
* விழுப்புரம்

மத்திய மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.


Top Post Ad

Below Post Ad