Type Here to Get Search Results !

முகத்தில் கரும்புள்ளியா.?கவலைய விடுங்க.. எளிய முறையில் நீங்கும்..!!

முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ்.

பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும்.

இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே இருக்கவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இது போல தினமும் காலையில் செய்து விட்டு வருவதனால், உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

Top Post Ad

Below Post Ad