Type Here to Get Search Results !

நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல் - அதிக வேட்புமனுக்கள் பெறப்பட்ட தொகுதி வெளியீடு! 



  
 தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.
  
 இன்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், தற்போது 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 4,500-ஐ கடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4,567 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 திருநங்கைகள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 70 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
  
  Source Nakkeeran

Top Post Ad

Below Post Ad